Skip to content Skip to sidebar Skip to footer

பஸ் போக்குவரத்து கட்டணத்தில்  திருத்தம்-    தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை

எரிபொருள் விலை  திருத்தத்திற்கு அமைய  பஸ் போக்குவரத்து கட்டணத்தில்  திருத்தம் மேற்கொள்ளப்படும் என  தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ ஓ சி ஆகியன எரிபொருள் விலையில்  திருத்தம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே   பெற்றோல் விலை  குறைக்கப்பட்டுள்ள போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள இயலாத நிலை காணப்படுவதாக தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெற்றோல்  மற்றும் ஏசல் விலை குறைப்பானது  எந்த விதத்திலும்  முச்சக்கரவண்டி கட்டணத்தில் தாக்கம் செலுத்தாது என குறித்த  சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.

Leave a comment

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

Whoops, you're not connected to Mailchimp. You need to enter a valid Mailchimp API key.