கிளிநொச்சி கரடிபோக்கு பகுதியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்! VIDEO
- By Capital News -
- 11 Feb 2019 -
- 48 Views
கிளிநொச்சி கரடிபோக்கு பகுதியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கரடிபோக்கு சந்தியில் கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் முறையற்ற விதத்தில் கட்டடம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியளார் தெரிவித்தார்.
சுமார் ஒரு மணி நேரமாக முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், பன்னங்கண்டி பகுதியை சேர்ந்த சுமார் 18 பேர் கலந்து கொண்டுள்ளனர்
வசதி படைத்தவர்களுக்கு குறித்த பகுதியில் வர்த்தக நடவடிக்கைக்காக இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேவை உள்ளவர்களுக்கு இடம் வழங்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.