உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் தேவையான உரிய ஆவணம் இதுவரை அரச அச்சகத்திற்கு வழங்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் தேவையான வர்த்தமானி அறிவிப்பானது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்துடன் வர்த்தமானியினை அச்சிடுவதற்காக அரச அச்சகத்திற்கு இதுவரை கிடைக்கப் பெறவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a comment